தமிழ்நாட்டிற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் “தகைசால் தமிழர்“என்ற விருதை வருடந்தோரும் வழங்கவுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு குழுவொன்றை அமைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்" விருது பெறும் விருதாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தன்று 10 இலட்சம் ரூபா பணப் பரிசும் தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.